Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

S.ஜானகி

மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் சின்ன வயதில் ரேவதி தான் இந்த வரிகளைப் பாடுகிறார் என்று நம்பினேன். ரேவதியின் பாடும் குரலாகத் தான் ஜானகியின் குரலை உள்வாங்கினேன். பிறிதொரு நாள் எஸ்.ஜானகியின் முகத்தை எதோவொரு பத்திரிகை பேட்டியில் காண நேர்ந்த… Read More »S.ஜானகி

அந்திமழையில்…

அந்திமழை ஜூலை 2026 இதழ் ப்ரேக்-அப் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதில் நான் எழுதி இருக்கும் கட்டுரை  “ப்ரேக் அப் பாடல்கள்”  வெளியாகி உள்ளது.

லிங்கம்

லிங்கம் பார்த்தேன். தம்பி வாஸ்தோவின் எழுத்து கச்சிதமாக அமையப் பெற்றிருக்கிறது. பல இடங்களில் வசனம் வீர்யமாகவும் அளவு கூடாமலும் ஒலித்தது. புஷ்பா-சுப்ரமணியபுரம்-நந்தா- தொடங்கித் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேங்க்ஸ்டர் படங்கள் பலவற்றிலும் பார்த்துப் பழக்கமான காட்சிகள் பலவற்றையும் கழித்து விட்டுப்… Read More »லிங்கம்

நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »

ரவி சுப்ரமணியன்

நாளை மறுதினம் 08/03/2026  அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.  

யாக்கை 32

யாக்கை 32 பரமபதம் கலிவரதனை இரக்கமில்லாமல் துள்ளத் துடிக்க கொலை செய்த ஐவரில் இரண்டு பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வாசித்த போது மூவரின் முகங்களிலும் சலனமே இல்லை.… Read More »யாக்கை 32

அய்யப்ப மாதவன் நலநிதி

மனம் வேறு கவிதை வேறு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் கவிஞர், நிஜம் போலவே நிகர் செய்யும் புகைப்படக் கலைஞர், அய்யப்ப மாதவன் நலநிதி ஒன்றை ஒழுங்கு செய்து வருகிறார்கள். புது எழுத்து மனோன்மணி அதனை திரட்டி வருகிறார். இது குறித்து கவிஞர்… Read More »அய்யப்ப மாதவன் நலநிதி

யாக்கை 31

யாக்கை 31 அனாகதம்   மூர்த்தியைக் காணவில்லை என்று அவன் மனைவி இந்திரா வந்து சொன்ன போது கிண்டல் செய்கிறாள் என்றுதான் அவள் முகத்தை ஏற ஏற பார்த்தான் கதிர். காணாமல் போகிற வயசா இது? அவன் உதடுகள் முணுமுணுத்தன ‘இதை… Read More »யாக்கை 31

21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

சமீபத்து ப்ரியக்காரி 21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல் 1 ஸ்டெல்லா என்பது யார் யார் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை என்பது நெடுங்காலப் புகார் 2 ஒரு ஸ்டெல்லா ஒரு போதும் ஸ்டெல்லா என்பது யார் எனக் கேட்க மாட்டாள் என்பதொரு… Read More »21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

யாராலும் எழுத முடியாத வரிகள்

வாசகபர்வம் 3     ஜூடாஸ் மரம் மலர்விழி வேரல் புக்ஸ் முதல் பதிப்பு டிசம்பர் 2022 120ரூ     யாராலும் எழுத முடியாத வரிகள் கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ்… Read More »யாராலும் எழுத முடியாத வரிகள்