சௌகார் ஜானகி நிறை வாழ்வு வாழ்ந்தார்.100 படங்களை சொல்ல முடியும் சௌகாரின் விதவித நடிப்பை போற்றுவதற்கு. சௌகார் ஜானகி என்று சொன்னதும் மறக்க முடியாத இரண்டு படங்கள் புதிய பறவை மற்றும் தில்லு முல்லு. புதிய பறவை படத்தில் சிவாஜி ஏற்றிருந்த நாயக வேடத்தின் ஒட்டுமொத்த மனச்சமனை முற்றிலும் குலைத்து படத்தின் இரண்டாம் பாதியை தன் தோள்களில் தாங்கியிருப்பார். தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் சௌகார் இருவரும் பங்கு கொள்ளும் காட்சிகளில் ரஜினிகாந்தே மௌனம் காக்க நேர்ந்தது. தனது 87 ஆவது வயதில் ஜீத்து ஜோசப் இயக்கிய “தம்பி” திரைப்படத்தில் தான் ஏற்ற வேடத்தை பிரமாதப்படுத்தினார் ஜானகி. தனியே மிளிர்ந்த தாரகை சௌகார் ஜானகி.