Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர்… Read More »சொல் வழி யாகம்

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு சின்ன வயதில் இரவுகள் ஒளிரும் விளக்குகளை பொறுத்து எந்த பயமும் இல்லாமல் அமைந்தன. வடக்கு மாசி வீதி ,சிம்மக்கல் மற்றும் புதூர் என 13 வயது வரை நகரத்தின் சந்தடி மிகுந்த தெருக்களில் குடியிருக்க வாய்த்தது.… Read More »எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

சந்திப்பு

சந்திப்பு அவன் ஒரு எழுத்தாளன். சமீப நாட்களாக அவன் முன்பு போல் இல்லை. சமீப நாட்களாக என்றால் மிகச் சரியாக சொல்வதானால் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளிவந்த நாட்டின் முதலாம் இடம் பிடித்த வாராந்திரியில் அவன் எழுதிய… Read More »சந்திப்பு

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்” கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து … Read More »இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்   அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும்  சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத… Read More »எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

யாக்கை 12

மகிழ மரத்தடி செல்வத்துக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. செல்வத்துக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது.… Read More »யாக்கை 12

காதல் கோட்டை

எனக்குப் பிடித்த சினிமா 01 காதல் கோட்டை திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது -வெர்னர் ஹெர்ஸோக் தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட… Read More »காதல் கோட்டை

யாக்கை 11

யாக்கை 11 வாழ்வின் வானம் செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட… Read More »யாக்கை 11