ரவி சுப்ரமணியன்
நாளை மறுதினம் 08/03/2026 அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
நாளை மறுதினம் 08/03/2026 அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
மனம் வேறு கவிதை வேறு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் கவிஞர், நிஜம் போலவே நிகர் செய்யும் புகைப்படக் கலைஞர், அய்யப்ப மாதவன் நலநிதி ஒன்றை ஒழுங்கு செய்து வருகிறார்கள். புது எழுத்து மனோன்மணி அதனை திரட்டி வருகிறார். இது குறித்து கவிஞர்… Read More »அய்யப்ப மாதவன் நலநிதி
அகநி வெளியீடாக வந்திருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் மொத்தம் 12 தொகுதிகள். 8400 ரூபாய் விலையுள்ள செம்பதிப்பு நூல்களை 40சதமானக் கழிவுடன் ரூபாய் 5000 விலைக்கு இதனைத் தருகிறார்கள். பிரதிகள் தீர்ந்துவிடும் முன் ஆர்வமுள்ளோர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளவும். அகநி: 9842637637… Read More »ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்
எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} “எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா… Read More »இலக்கியப் பரிசு
ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் ” என் பல்வண்ணக் காட்சிக்கருவி” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது “வசியப்பறவை” குறித்த கட்டுரை ” அந்நிய… Read More »“அந்நிய ஊருக்கு”
குமுதம் சிறுகதை இந்த வாரக் குமுதம் இதழில் எனது சிறுகதை “சபாட்டினி” வெளியாகி உள்ளது. இதற்கான ஓவியத்தை எழுதியிருப்பவர் ஓவியர் ஸ்யாம். குமுதம் இதழுக்கு நன்றி!!
புதிய தொடர் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தினமலர் இதழோடு வெளியாகும் இணைப்பிதழான வாரமலர் இதழில் “சொல்லப்படாத கதைகள்” எனும் பெயரில் சென்ற நூற்றாண்டின் சினிமா குறித்த தொடரொன்றைத் தொடங்கி இருக்கிறேன். வாசித்து இன்புறுக என்று யாவரையும் அன்போடு வேண்டுகிறேன். வாழ்தல் இனிது… Read More »புதிய தொடர்
நூல் வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதியன்று மதுரை- மேலூரில் பாபு சசிதரனின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்ற இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொள்ள வரவேற்கிறேன்.
தமிழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய விழாக்கள் மாவட்டந்தோறும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் நாளை 26-03-2023 மற்றும் திங்கட்கிழமை 27-03-2023 இரண்டு தினங்கள் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தினுள் வைகை இலக்கியத் திருவிழா நடக்கவிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல்… Read More »வைகை இலக்கியத் திருவிழா