Skip to content

வலைப்பூ

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்.”பாக்கணும்டா” ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய… Read More »இன்னொரு நந்தினி

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது? மூன்றாவது பிறந்தநாள் வரை சரளமாக பேச்சு வராத ஒரு குழந்தை. ஒவ்வொரு சொல்லையும் பிறவற்றோடு வேறுபடுத்தி பேச்சு திறன் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்தோடு அது வரையிலான காலத்தை பெற்றோரும் பாட்டியும் கவலை… Read More »எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

யாக்கை 17

யாக்கை 17 நிழல்மழை   ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர்… Read More »யாக்கை 17

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி… Read More »யாக்கை 16

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது… Read More »யாக்கை 15

நதியும் நிழலும்

நதியும் நிழலும் R.P.ராஜநாயஹம் எழுதிய  “சினிமா என்னும் பூதம்” நூலை முன்வைத்து கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ… Read More »நதியும் நிழலும்

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும்… Read More »மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர்… Read More »சொல் வழி யாகம்