20 வான்பாதி


20 வான்பாதி


சிறுபிள்ளை
மணிக்கட்டு
வலிக்க வலிக்க
ஏற்றிக் கொண்டிருக்கையில்
சட்டென்று
நூலறுபடுகிற
பாதிவான் பட்டம்
போலொரு
பெரிய விக்கல்
அதற்கு நடுவே
வெறித்த கண்களோடு
உயிரைவிடுகிற
நாள்பட்ட
பிறழ்சாட்சியக் காரன்
வெளிப்படுத்தச்
சித்தங்கொண்ட
முதலாவது
உண்மைபோலவே
எனக்குள்ளே
புதைந்தழியட்டும்
எனதன்பு
மொத்தமும்