Skip to content

aathmaarthi

நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி… Read More »யாக்கை 16

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

4 கவிதைகள்

குடி வாசனை பற்றிய 4  கவிதைகள் 1 ஒன்றுக்கு மேற்பட வேண்டுமா இதைக் குடி 2 அந்தப் பறவை இங்கே தான் இருக்கிறது. அதே பறவை அங்கேயும் இருக்கிறது. இன்னும் சில இடங்களிலும் இருப்பேன் என்றபடி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதனருகாமையில்… Read More »4 கவிதைகள்

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்

            காபி சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி… Read More »

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20