கவிதை

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

ஹம்மிங்

எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்

19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி

9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9 தானற்ற வேறொருவள் வேறு வேறு மாந்தர்க்கு          வெவ்வேறு முத்தங்கள்    உண்டெனக் கருதுவதாயின்            ஒற்றைத் தருணமும்   எனக்கு வேண்டாம்        … Read More »9 தானற்ற வேறொருவள்

8 ஒன்றேயொன்று

சமீபத்துப்ரியக்காரி 8 ஒன்றேயொன்று உன் கண்களில் சதா கனன்றுகொண்டிருக்கிற காலகால ஒளியை மட்டுப்படுத்திய பின் தொடங்கும் முடிவற்ற இருளின் பூர்ணாகதம் நான்

7 பொன்-பொழுது-தோன்றல்

7 பொன்-பொழுது-தோன்றல்      சமீபத்துப்ரியக்காரி ஒரு மைதுனத்தின் பாதியில் நீ வந்து சேர்கின்ற அனிச்சையென்பது இவ்வாறானது. கவனிக்க மறந்த கொதி பொங்கி எரிதலை அணைத்து வைக்கிற பாலினொரு வெண்கோடு மெல்லக் கரைதாண்டிக் கூடத்திற்கு வந்து சேர்கையில் கூடவே அழைத்து வரும்… Read More »7 பொன்-பொழுது-தோன்றல்

6 பழைய

சமீபத்துப் ப்ரியக்காரி 6 பழைய அன்பே உன்னால்   உன்னை வெளிப் படுத்த முடியாத போது நானிந்தப்ரபஞ்சத்தை இரண்டாகக் கிழித்தெறிவேன். அதன் பின் எல்லாமும் இரண்டாய் மாறும். நீ யாருடைய கண்களுக்குத் தென்பட விரும்பவில்லையோ அவர்கள் ஒரு உலகத்தில் தள்ளப்படுவார்கள். அதன் பெயர்… Read More »6 பழைய

சாலச்சுகம் 2

___________________________________________________________________ 1. நான் கேட்கவேயில்லை ஆனாலும் இரண்டு மனம் வாய்த்திருக்கிறது. ஒன்று நினைத்து வாடுகிறது மற்றது அதற்காக நொந்து கொள்கிறது. 2 எந்தப் பாவியோ நான் அருந்துவதற்காக வைத்திருந்த விஷத்தில் தண்ணீரைக் கலந்துவிட்டிருக்கிறான் 3 நீங்கள் அடைந்துவிட்டதாய் இறுமாந்து கொள்கிற அதே… Read More »சாலச்சுகம் 2