குமுதம் சிறுகதை
குமுதம் சிறுகதை இந்த வாரக் குமுதம் இதழில் எனது சிறுகதை “சபாட்டினி” வெளியாகி உள்ளது. இதற்கான ஓவியத்தை எழுதியிருப்பவர் ஓவியர் ஸ்யாம். குமுதம் இதழுக்கு நன்றி!!
குமுதம் சிறுகதை இந்த வாரக் குமுதம் இதழில் எனது சிறுகதை “சபாட்டினி” வெளியாகி உள்ளது. இதற்கான ஓவியத்தை எழுதியிருப்பவர் ஓவியர் ஸ்யாம். குமுதம் இதழுக்கு நன்றி!!
எனக்குள் எண்ணங்கள் 15 ரசிகன் மதுரையில் ஒவ்வொரு தியேட்டருக்கும் எனக்குமான தனித்துவமான உறவு மெச்சத்தக்கது. என் முதல் திரைப்படத்தை பாட்டியோடு சென்று பார்த்த சாந்தி தியேட்டர் எனக்கு ஏழெட்டு வயதாக இருக்கும்போதே மூடிவிட்டார்கள். அடுத்து குடியிருந்த சிம்மக்கல் வீட்டில், கூப்பிடு தூரத்தில்… Read More »எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்
அன்பை அளவிடுதல் என்னிடமிருப்பது தாங்க முடியாத பேரன்பு. எப்படியானதென்றால் “விற்கப் பண்டங்களைச் சுமந்துகொண்டு வீதிவழியே வருபவள் வெயில் பொழிவின் நடுவே கிடைக்கும் சின்னஞ்சிறு நிழலடியில் தலைச்சுமையை இறக்கித் தரையில் கிடத்தி விட்டுச் சற்றே கண்ணயர முனைகிறாள். நொடிப்பொழுதில் அரிதினும் அரியவொன்றைக் களவுகொடுக்கிறாற்… Read More »சாலச்சுகம் 19
எனக்குள் எண்ணங்கள் 14 எம்ஜி.ஆரும் ரஜினியாரும் அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். எம்.ஜி,ஆருக்காக எம்.ஜி.ஆரால் எம்.ஜி.ஆரின் வாழ்வை வாழ்வதாக மட்டுமல்ல, எம்.ஜி.ஆருடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு தோற்றம். உண்மையில் அது ஒரு கள்ள பக்தி என்றுதான் சொல்வேன். உடல்நலத்தைப் பேணுவது, தீய பழக்கங்களிலிருந்து தள்ளி… Read More »எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்
புதிய தொடர் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தினமலர் இதழோடு வெளியாகும் இணைப்பிதழான வாரமலர் இதழில் “சொல்லப்படாத கதைகள்” எனும் பெயரில் சென்ற நூற்றாண்டின் சினிமா குறித்த தொடரொன்றைத் தொடங்கி இருக்கிறேன். வாசித்து இன்புறுக என்று யாவரையும் அன்போடு வேண்டுகிறேன். வாழ்தல் இனிது… Read More »புதிய தொடர்
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ரயில் (பூர்வ ஜென்ம வடக்கன்) படத்தின் முதல் பாடல் பூ பூக்குது வெளியாகி உள்ளது. பாட்டு எழுதி இருப்பவர் ரமேஷ் வைத்யா. இசையமைத்து பாடியிருப்பவர் எஸ்.ஜே.ஜனனி. யாருக்குமே வாய்க்காத ஒரு குரல் ஜனனியுடையது. அச்சு… Read More »வடக்கே போகும் ரயில்
ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள் இன்று நீ உபசரிக்கவிருக்கும் திரவத்துக்கு ஈடாய் என்னால் என்ன தரமுடியும் நண்பா என் காதிரண்டும் உன் காலடி அடிமைகள். சொல்ல முயற்சித்து முழுமையாகாமற் போகவிருக்கும் உந்தன் கதைச்சோகம் முழுமையையும் கேட்டுத் திளைக்கட்டும்… Read More »டச்-வுட் 2
என் வாழ்வின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது உன்னைக் கண்டுபிடித்தே ஆவது. அதன் பின், வேறேதும் நோக்கமில்லை. கண்டுபிடித்த உன் முன் அந்தக் கணத்தின் என்னை நிறுத்தி வைப்பதோடு அந்த நோக்கம் நிறைந்துவிடும். எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி அந்தத் தோன்றலை… Read More »டச் வுட் – 1
எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்
மஞ்சுமெல் பாய்ஸ் சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்